தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

தலைநகர் டெல்லியில், உத்யோக் நகரில் உள்ள பீராகரி மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள காலணி தொழிற்சாலையில் வியாழக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென தொழிற்சாலை முழுவதும் பரவியது. தகவல் கிடைத்ததும் 33 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர். சம்பவம் தொடர்பான முழு விவரம் இன்னும் தெரியவரவில்லை. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகி இருக்கலாம் என தெரிகிறது.
Tags :