ரவுடிகள் என்கவுன்ட்டர் - போலீசார் விசாரணை
சென்னை சோழவரம் அருகே இரண்டு ரவுடிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். சோழாவரம் அருகே பிரபல கூலிப்படை தலைவன் முத்துசரவணன் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். கொலை வழக்கில் முத்து சரவணனை பிடிக்க முயன்றபோது காவலர்களை தாக்கியதால் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்துள்ளனர். இதனையடுத்து, ரவுடிகள் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இடத்தில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆவடி மாநகர போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், துப்பாக்கி, சிதறி கிடக்கும் தோட்டாக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
Tags :