இந்திய கிரிக்கெட் அணி டி-20 உலககோப்பையை இரண்டாவது முறையாகக் கைப்பற்றியது.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த t20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் மோதின. டாஸ்வென்ற நியூஸிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய இந்திய அணி தம் அபாரமான ஆட்டத்தை களத்தில் வெளிப்படுத்தியது .சஞ்சு சாம்சன் 89 ரன்கள் 46 பந்துகளில் எடுத்ததோடு அவருக்கு இணையாக இருந்த கிசான் 25 பந்துகளில் 54 கண்களை எடுத்தார் .அபிஷேக் ஷர்மா 21 பந்தில் 52 ரன்களை எடுத்து அடுத்தடுத்து வந்த இந்திய அணி வீரர்கள் தங்களுடைய திறமையை காட்ட ஆரம்பித்தனர். 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் மிக கம்பீரமாகஎடுத்தது,இந்திய அணி. அடுத்து ஆட வந்த நியூசிலாந்து அணி, இந்தியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 30 ரன்களுக்கு உள்ளாகவே இரண்டு விக்கெட் களை இழந்து ...அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்தது. அஸர் பட்டேல் ,பும்ரா தொடர்ந்து விக்கெட்டுகளை எடுத்து இந்திய அணிக்கு வலு சேர்த்து நியூசிலாந்து அணியை பலவீனப்படுத்தினர். நியூசிலாந்து அணி 19 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்து இந்திய அணியிடம் 96 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணி 2024 இல் கோப்பை வென்றெடுத்ததோடு இந்த போட்டியின் மூலம் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று கோப்பையை தக்க வைத்துக் கொண்டது. டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த பலமான அணியாக இந்திய அணி உள்ளது.
Tags :


















