கோவை மத்திய சிறையில் இன்று முதல் குற்றவாளிகள் அடைக்கப்படுகின்றனர்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கோவை மத்திய சிறையில், புதிய விசாரனை கைதிகள் அனுமதிக்கப்படவில்லை, அதற்கு பதிலாக பொள்ளாச்சி, ஈரோடு, உடுமலைபேட்டை உள்ளிட்ட கிளைச்சிறைகளில் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டனர். கொரோனா பாதிப்பு முற்றிலுமாக குறைந்துள்ளதால், இன்று முதல் கோவை மத்திய சிறையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு நேரடியாக அனுமதிக்கப்படுகிறார்கள். அங்கு தனி அறையில் அடைக்கப்பட்டு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வந்தவுடன் அவர்கள் செய்த குற்றங்களின் அடிப்படையில் அங்கு உள்ள பிளாக்குகளில் அடைக்கப்படுகிறார்கள்.
Tags : The first convicts are being held at the Coimbatore Central Jail today.