மூன்று கோடி வீடுகள் ஏழை மக்களுக்கு பிரதமர் பெருமிதம்

by Staff / 08-04-2022 11:53:35am
மூன்று கோடி வீடுகள் ஏழை மக்களுக்கு பிரதமர் பெருமிதம்


பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் எழைகளுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய 3 கோடி வீடுகள் கட்டி முடித்து உள்ளதாகவும் இவை மகளிர் அதிகாரத்தின் அடையாளமாக திகழ்வது பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஊரக வீட்டு வசதி திட்டத்தில் 2 கோடியே 52 லட்சம் வீடுகள் கட்டி முடித்து உள்ளதாகவும் இதற்காக ஒரு லட்சத்து 95 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாகும் குறிப்பிட்டுள்ளர்.  நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தில் 58 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு உள்ளதாகவும் அதற்கு ஒரு லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  ஒவ்வொரு வீட்டுக்கும் எரிவாயு இணைப்பு குடிநீர் இணைப்பு மின் மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via