துண்டு துண்டுடாக கிடந்த பெண்ணின் உடல்
டெல்லியில் கீதா காலனி பகுதியில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் கிடப்பதாக போலீசாருக்கு இன்று தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் பாலத்திற்கு அருகே பெண்ணின் உடல் பாகங்கள் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பெண்ணின் தலை பாலத்தின் அருகே கிடைத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பெண்ணை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி உடலை பாலத்தின் அருகே வீசியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Tags :