15 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இரண்டு வயது குழந்தை பலி

by Staff / 23-10-2022 02:06:55pm
15 அடி பள்ளத்தில்  கார் கவிழ்ந்தது.  இரண்டு வயது குழந்தை பலி

கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் (34) இவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சொந்த ஊரில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக இவர் காரில் தனது மனைவி கீர்த்தனா, குழந்தை சுஷ்மிதாவுடன் கரூர் நோக்கிச் சென்றுக்கொண்டிருந்தார். கார் மணவாசி டோல்பிளாசா அருகே சென்றுக்கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இரண்டு வயது குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via