புளியரை தட்சிணாமூர்த்தி கோவிலில் லட்சார்ச்சனை துவங்கியது

by Editor / 11-04-2022 02:55:58pm
புளியரை தட்சிணாமூர்த்தி கோவிலில் லட்சார்ச்சனை துவங்கியது

தென்காசி மாவட்டம் புளியரையில் அமைந்துள்ளது. அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத சதாசிவ மூர்த்தி தக்ஷிணாமூர்த்தி ஆலயம் இந்த ஆலயத்தில் வரும் 13ஆம் தேதி அன்று குரு பெயர்ச்சி நடைபெற உள்ளது. அன்றுஅதிகாலை 1:42 மணிக்கு வியாழன் குரு பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பிரவேசிக்க இருப்பதால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன. இதன் தொடர்ச்சியாக குருபெயர்ச்சி திருவிழா இன்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.இதனைத்தொடர்ந்து  இன்று காலை 9 மணிமுதல் லட்சார்ச்சனை தொடங்கியது. இந்த லட்சார்ச்சனை நாளை 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

புளியரை தட்சிணாமூர்த்தி கோவிலில் லட்சார்ச்சனை துவங்கியது
 

Tags :

Share via