ஓய்வுபெற்ற சார்பு ஆய்வாளர் கொலை வழக்கு நான்கு பள்ளி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது

by Staff / 09-06-2022 11:51:20am
ஓய்வுபெற்ற சார்பு ஆய்வாளர் கொலை வழக்கு நான்கு பள்ளி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது

மதுரை மாவட்டம் சோழவந்தானில் ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் கொலை வழக்கில் நான்கு பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். தேனுர் சேர்ந்த ஜோதி என்பவர் இரண்டு நாட்களுக்கு முன்பு ஜனகை மாரியம்மன் கோவில் திருவிழாவில் கலந்துகொண்டு வீடு திரும்பினார்.வைகையற்றுப்  பகுதியில் சென்ற அவரை வழிமறித்த மர்ம கும்பல் கத்தியால் குத்திவிட்டு 300 ரூபாய் பணத்தையும் பறித்துக் கொண்டு ஓடிவிட்டது. இது தொடர்பாக 5 பேரை கைது செய்த போலீசார் விசாரித்ததில் இரவு நேரங்களில் தனியாக வரும் நபர்கள் வழிமறித்து கஞ்சா மதுபானம் வாங்க கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து செல்வது தெரியவந்தது.

 

Tags :

Share via