அமித்ஷா விளக்கம் தரும் வரை போராட்டம் தொடரும்

by Staff / 15-12-2023 02:35:59pm
அமித்ஷா விளக்கம் தரும் வரை போராட்டம் தொடரும்

நாடாளுமன்றத்தில் வண்ண புகை குண்டுகளுடன் நுழைந்து போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர். அதன் பின்னர் அவையில் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து முழக்கம் எழுப்பிய எதிர்கட்சியினரை அவையில் இருந்து வெளியேற்றினர். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என திருச்சி சிவா பேட்டி அளித்துள்ளார். தாக்குதல் நடத்தியவர்களுக்கு பரிந்துரை கடிதம் வழங்கிய பாஜக எம்.பி. மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Tags :

Share via