மூச்சு மாதிரியை வைத்து கொரோனா இருக்கிறதா என்பதை கண்டறியும் கருவி, முதல்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

by Staff / 16-04-2022 04:31:14pm
மூச்சு மாதிரியை வைத்து கொரோனா இருக்கிறதா என்பதை கண்டறியும் கருவி, முதல்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மூச்சு மாதிரியை வைத்து கொரோனா இருக்கிறதா என்பதை கண்டறியும் கருவி, முதல்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் அவசர பயன்பாட்டுக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த கருவி, எளிதில் எடுத்துச் செல்லக்கூடியதாக இருக்கும். ஆஸ்பத்திரிகள், நடமாடும் பரிசோதனை மையங்கள், டாக்டர்கள் அறை ஆகியவற்றில் இதை பயன்படுத்தலாம். 3 நிமிடங்களில் இது முடிவை தெரிவிக்கும். அங்கீகரிக்கப்பட்ட சுகாதார பணியாளர் மேற்பார்வையில் இந்த சோதனையை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சோதனையில், கொரோனா பாசிட்டிவ் முடிவு, 91.2 சதவீதம் துல்லியமாக இருப்பதாக உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு கூறியுள்ளது. ஒரு கருவி மூலம் நாள் ஒன்றுக்கு 160 மாதிரிகளில் சோதனை நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.
 

 

Tags :

Share via