கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் 6 பேர் சிக்கி கொண்டனர்.
நெல்லை மாவட்டம் அடை மிதிப்பான் குளம் பகுதியில் உள்ள குவாரியில் ராட்சச பாறை விழுந்து விபத்து.
300 அடி பள்ளத்தில் ஆறு பேர் சிக்கியுள்ளனர்.தீயணைப்பு துறை வீரர்கள் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.300 அடி பள்ளத்தில் முருகன், செல்வம் செல்வகுமார், விஜய் ,முருகன், ராஜேந்திரன் உள்ளிட்ட 6 பேர் சிக்கியுள்ளதாக தகவல்.இதில் 2 நபர்கள் முருகன் மற்றும் விஜய் ஆகியோர் மீட்கப்பட்டதாகவும்மற்றவர்கள் பாறைக்குள் சிக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த கல்குவாரி க்கு ஏற்கனவே லைசென்ஸ் காலாவதி ஆகி விட்டதாகவும் கூறப்படுகிறது.இதன் தொடர்ச்சியாக சமத்துவம் நடந்த பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், தீயணைப்புத்துறை அதிகாரிகள் மீட்பு பணி நடைபெறும் இடத்தில் முகாமிட்டு உள்ளனர்,நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகிறார்.
Tags : Six people were trapped in a rock fall in Calcutta.