தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் தந்தையிடம் ஆசிர்வாதம் வாங்கிய புதுமண தம்பதிகளின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

by Editor / 16-05-2022 09:19:12am
தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் தந்தையிடம் ஆசிர்வாதம் வாங்கிய புதுமண தம்பதிகளின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் தந்தையிடம் ஆசிர்வாதம் வாங்கிய புதுமண தம்பதிகளின் நெகிழ்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு சுஜாலினி என்பவருக்கும் நேற்று நாச்சியார் கோயில் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.இந்தநிலையில் மணமகனின் தந்தை செல்வமணிக்கு திருமணம் நடைபெறும் முதல் நாள் இரவு மூச்சுத் திணறல் ஏற்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்

இந்த நிலையில் திருமணம் முடிந்த கையோடு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்ற மணமகனின் தந்தையிடம் மணமக்கள் கண்ணீர் மல்க ஆசிர்வாதம் வாங்கிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Tags : Video of a newlywed couple receiving blessings from their father, who is being treated in the intensive care unit, went viral on social media.

Share via

More stories