குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா.

by Editor / 12-10-2024 10:49:56pm
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கடந்த 03.10.2024 அன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவில் முக்கிய நிகழ்வான சூரசம்கார விழா இன்று (12.10.2024) நடைபெறுவதை முன்னிட்டு தென்மண்டல காவல்துறை தலைவர்  பிரேம் ஆனந்த் சின்கா குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் வளாகம், சூரசம்காரம் நடைபெறும் கடற்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசாரின் பாதுகாப்பு பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, காவல்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இந்நிகழ்வின் போது திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பா. மூர்த்தி,தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான்   திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர்  அனிதா உட்பட காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

 

Tags : குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா தென்மண்டல காவல்துறை தலைவர்  பிரேம் ஆனந்த் சின்கா   ஆய்வு.

Share via