தந்தையின் கழுத்தறுத்த மகன்

by Staff / 24-12-2022 02:27:47pm
தந்தையின் கழுத்தறுத்த மகன்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள ஒக்கநாடு கீழையூர் வடக்குத் தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது60). விவசாயி. இவருக்கும் இவரது மகன் கங்காதரனுக்கும் (23) இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. அப்போது கங்காதரன் தந்தை பெருமாளின் கழுத்தை கத்தியால் அறுத்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த பெருமாள் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் ஒரத்தநாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்து, கங்காதரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via