தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்
பருத்தி நூல் விலை அதிகரித்ததால் பல்வேறு பின்னலாடை நிறுவனங்கள் தங்கள் தொழிலை நடத்துவது
சிரமமாக உள்ளதாகவும் இந்நிலை தொடர்ந்து நீடித்தால் பல்லாயீரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை
இழப்பு ஏற்படும் என்று தெரிவித்திருந்தனர்.இதனைத்தொடர்ந்து இன்று திருப்பூரை மையமாகக்கொண்டு செயல்படும்
நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால்,பல நூறு கோடிகள் இழப்பேற்படும் நிலையை த்தவிர்க்க
தமிழக அரசு முயற்சி மேற்கொள்ளும் முகமாக பருத்தி, நூல் விலை உயர்வின் காரணமாக தமிழகத்தில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் கடுமையான பிரச்சினைகளைக்கருத்தில் கொண்டு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திரமோடிக்குகடிதம் எழுதியுள்ளார்
Tags :