மேடையில் இருந்து தவறி விழுந்து பலியான புலனாய்வு அதிகாரி

by Staff / 20-05-2022 12:18:55pm
மேடையில் இருந்து தவறி விழுந்து பலியான புலனாய்வு அதிகாரி

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து கொண்டிருந்த புலனாய்வு அதிகாரி ஒருவர் மேடையில் இருந்து கால் தவறி விழுந்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் வருகையை முன்னிட்டு அவர் பங்கேற்கும் விழா மேடையில் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேடையில் ஏறி அதிகாரிகள் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது புலனாய்வு துறை உதவி இயக்குனர் குமார் என்பவர் அந்தகலை அரங்கில் உள்ள மேடையில் நின்றபடி புகைப்படம் எடுத்துக்கொண்டு கொண்டே நடந்தார். அப்போது மேடையிலிருந்த வெற்றிடத்தை கவனிக்காமல் கால் இடறி கீழே விழுந்தார். அவருக்கு தலையில் பலத்த காயம் அடைந்து மயங்கி நிலையில் காணப்பட்ட அவரை மீட்டு அதிகாரிகள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். புலனாய்வு அதிகாரி குமார் கால் தவறி விழுந்து விபத்து காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. சம்பவம் குறித்து விவரித்துள்ள போலீஸ் குமரேஷ் மேடையின் நுனிப்பகுதியில் வந்துவிட்டதை கவனிக்காமல் கால் இடறி தடுமாறிக் கீழே இருந்து பள்ளத்தில் விழுந்தார் என்றும் அந்த பள்ளத்தில் விளக்குகள் மற்றும் கல் வைக்கவும் தொழில்நுட்ப பணியாளர்கள் இருக்கவும் படிக்கட்டு உடன் கூடிய ஒரு சிறிய அறை இருந்தது அதற்குள் விழுந்ததால் அவரது தலையின் உட்பகுதியில் ஏற்பட்ட பலத்த காயத்தால் அவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via