நவ்ஜோத் சித்து இன்று பட்டியலா காவல் நிலையத்தில் சரண்

by Staff / 20-05-2022 12:22:31pm
நவ்ஜோத் சித்து இன்று பட்டியலா காவல் நிலையத்தில் சரண்

 பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் நவ்ஜோத்  சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவர் இன்று பிற்பகல் பட்டியலா காவல் நிலையத்தில் சரண் அடைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உச்சநீதிமன்றத்தில் இந்த தண்டனையை ரத்து செய்யக் கோரி சித்து சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படுகிறது. 1988ஆம் ஆண்டு சாலையில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் சிங் என்பவரின் தலையில் கையால் ஓங்கி அடித்தால் அந்த நபர் காயமடைந்து பின்னர் உயிரிழந்தார் இவ் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.இதனை ரத்து செய்வதற்க இன்று சரண் அடைகிறார்.

 

Tags :

Share via