வேட்டைக்கு தயாரான ஆன்லைன் ரம்மி - அன்புமணி

by Staff / 11-11-2023 01:58:17pm
வேட்டைக்கு தயாரான ஆன்லைன் ரம்மி - அன்புமணி

ஆன்லைன் ரம்மி தடை விவகாரத்தில் தமிழக அரசு உடனே உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆன்லைனில் ரம்மி ஆடினால், ஒரு கோடி ரூபாயுடன், ஒரு கிலோ தங்கமும் பரிசு என்று ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் வலைவிரித்திருக்கின்றன. ஆன்லைன் ரம்மி, போக்கர் திறமை சார்ந்த விளையாட்டு எனக்கூறி அதன்மீது விதிக்கப்பட்ட தடையை சமீபத்தில் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதில் மேல்முறையீடு செய்து நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை வாங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via