சிறுமியை பலாத்காரம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்

by Staff / 11-11-2023 02:04:40pm
சிறுமியை பலாத்காரம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்

ராஜஸ்தானில் தௌசா மாவட்டத்தில் தேர்தல் பணியின் போது 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், சப் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் ராஜஸ்தான் மாநில அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள மாநில பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அளவில் நெருக்கடி தரும் என்று கூறப்படுகிறது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சிறுமியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் பர்சாதி லால் மீனா தெரிவித்தார்.

 

Tags :

Share via