இந்தியாவில் புதிதாக 45 ஆயிரத்து 352 பேருக்கு கொரோனா

by Editor / 03-09-2021 03:38:34pm
 இந்தியாவில் புதிதாக 45 ஆயிரத்து 352 பேருக்கு கொரோனா

 

இந்திவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45 ஆயிரத்து 352 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவல் கணிசமாக குறைந்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக கொரொனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45 ஆயிரத்து 352 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. நாட்டில் இதுவரை 3 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 937 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 366 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 39 ஆயிரத்து 895 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 34,791 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 20 லட்சத்து 63 ஆயிரத்து 616 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.45 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் நாடுமுழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 3,99,778 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில்

இதுவரை 67 கோடியே 9 லட்சத்து 59 ஆயிரத்து 968 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் தற்போது 21 கோடியே 99 லட்சத்து 15 ஆயிரத்து 847 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பில் இருந்து இதுவரை 19 கோடியே 65 லட்சத்து 59 ஆயிரத்து 834 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 45 லட்சத்து 55 ஆயிரத்து 693 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றுக்கு தற்போது 1 கோடியே 88 லட்சத்து 320 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Tags :

Share via