பயங்கரவாத தாக்குதல்.. பாஜக முன்னாள் எம்பி-க்கு மரண தண்டனை?

மாலேகான் பயங்கரவாத தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக முன்னாள் எம்பி பிரக்யாசிங் தாக்கூர் உள்ளிட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதிக்க சிறப்பு நீதிமன்றத்தில் NIA மனு தாக்கல் செய்துள்ளது. 2008ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் மாலேகான் நகரில் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 6 பேர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 17 ஆண்டுகளாக நடக்கும் இந்த வழக்கில் வரும் மே 8ஆம் தேதி மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
Tags :