எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 9  மீனவர்கள் கைது.

by Staff / 06-08-2025 08:14:58am
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 9  மீனவர்கள் கைது.

ராமேஸ்வரம்: பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து, மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவர்களை, படகுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. கற்பிட்டி கடற்பரப்பில் வைத்து எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைக்காக புத்தளம் கடற்படை முகாமிற்கு, மீனவர்களை அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 9  மீனவர்கள் கைது.

Share via