120 லிட்டர் சாராயத்தை எரித்த எஸ்.ஐ

by Staff / 12-04-2023 03:35:32pm
120 லிட்டர் சாராயத்தை எரித்த எஸ்.ஐ


சேலம் மாவட்டம் கெங்கவல்லி சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன், சானார் தெரு பகுதியில் ரோந்து மேற்கொண்டார். அப்போது பாபு என்பவரின் வீட்டில் 120 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்திருந்தது. தெரியவந்தது. இதையடுத்து அந்த சாராயத்தை பறிமுதல் செய்த எஸ்.ஐ., மணிமாறன் உடனடியாக சாராயத்தை அதே பகுதியில் கீழே ஊற்றி தீயிட்டு எரித்தார். மேலும், சாராயத்தை பதுக்கிய பாபு தப்பி ஓடியதால், அவர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். இந்த எஸ்.ஐ., சாராயத்தை கொளுத்திய வீடியோ வைரலாகிவருகிறது.
 

 

Tags :

Share via