முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நாளை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளாா்.
மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் நிவாரண நிதி பெறவும் தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் ஆலோசனை நடத்துவதற்காக தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நாளை டெல்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பகல் 12 மணி அளவில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. நாளை இந்தியா கூட்டணி சார்பாக டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க இன்று கோவை நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு விமானத்தின் மூலம் டெல்லி சென்றார் முதலமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :