லஞ்சம் வாங்கி கைதான பஞ்சாயத்து தலைவர் கணவர் உள்ளிட்ட இருவர் சிறையில் அடைப்பு.
செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் சேலம் அருகே உள்ள மகுடஞ்சாவடி பகுதியில் நிலம் வாங்கி உள்ளார்.இந்த நிலத்திற்கு வீட்டு மனை பிரிவுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என எற்ணாபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் மனு தந்தார்.இதற்கு எற்ணாபுரம் பஞ்சாயத்து தலைவர் மேகலாவின் கணவர் மணிகண்டன் என்பவரும், மணிகண்டனின் உதவியாளர் ஆனந்த் என்பவரும் ரூபாய் 50 லட்சம் லஞ்சமாக கேட்டு முன் தொகையாக 5 லட்சம் லஞ்சம் கெட்டு உள்ளனர்.
இந்த லஞ்ச பணம் ரூ 5 லட்சத்தை நேற்று வழங்கிய போது மணிகண்டன் மற்றும் அவரது உதவியாளர் ஆனந்த் ஆகியோரை சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர் பின்னர் நேற்று இரவு இருவரையும் சேலம் குமாரசாமிபட்டி பகுதியில் உள்ள லஞ்ச ஒழிப்பு பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டனர்.பின்னர் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Tags : லஞ்சம் வாங்கி கைதான பஞ்சாயத்து தலைவர்