மதரீதியான பேரணிகளுக்கு முன் அனுமதி பெற வேண்டும்- உத்திரப்பிரதேச அரசு உத்தரவு.

by Staff / 20-04-2022 11:15:07am
மதரீதியான பேரணிகளுக்கு முன் அனுமதி பெற வேண்டும்- உத்திரப்பிரதேச அரசு உத்தரவு.

எந்த ஒரு மத பேரணியும் அனுமதி இல்லாமல் நடத்தக்கூடாது என்றும், ஒலிபெருக்கிகள் அடுத்தவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்றும் ஆதித்யநாத் அரசு உத்தரவிட்டுள்ளது. ஒலிபெருக்கி பொருத்தப்பட்டுள்ள வழிபாட்டுத் தலங்களில் அந்த ஒலிபெருக்கியின் ஓசை வழிபாட்டு தலத்தின் வளாகத்தை விட்டு வெளியே வர  கூடாது என்றும், மசூதியில் அசான் அல்லது கோவில்களில் ஆரத்தி செய்யும்போது அதன் ஓசை வழிபாட்டுத்தலங்களுக்கு வெளியில் கேட்கக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

போக்குவரத்தை பாதிக்கும் எந்தவித மதரீதியான பேரனுக்கும் இனி காவல்துறையின் அனுமதி கிடையாது என்று யோகி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Tags :

Share via