தந்தை இறந்த சோகம் கல்லூரி பேராசிரியரான மகன் தற்கொலை

by Staff / 01-12-2022 02:18:34pm
தந்தை இறந்த சோகம் கல்லூரி பேராசிரியரான மகன் தற்கொலை

தஞ்சை மாதா கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 50) இவர் தஞ்சை சரபோஜி கல்லூரி பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவருடைய தந்தை கருப்பையன் சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். தாயார் உடல்நிலை பாதிப்பில் இருந்து வருகிறார்.

தந்தை இறந்துவிட்டதாலும் தயாரிக்க உடல் நல கோளாறு ஏற்பட்டதாலும் பேராசிரியர் ஜெயபிரகாஷ் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே விஷம் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர வேண்டும் என தனது மனைவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு கூறியுள்ளார்.

விரைந்து வந்த அவரது மனைவி தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் கணவரை சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு பரிசோதனை செய்ததில் அவர் விஷம் குடித்து இருந்தது தெரிய வந்தது. இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயப்பிரகாஷ் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்து தஞ்சை மருத்துவக் கல்லூரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via