கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண் பக்தர்கள் உயிரிழப்பு.

by Editor / 08-08-2022 03:40:43pm
 கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண் பக்தர்கள் உயிரிழப்பு.

ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்  பக்தர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். கத்து ஸ்ரீராம் ஜி கோயிலில் இன்று அதிகாலை சிறப்பு வழிபாடு  ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். அதிகாலை 5 மணியளவில் கோயில் கதவு திறக்கப்பட்டதும் பக்தர்கள் முன் அடித்தவாறு உள்ளே செல்ல முயன்றனர். அப்போது பெண் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் பின்னே வந்த பக்தர்கள் அடுத்தடுத்து கீழே விழுந்ததால் நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்தனர் இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via