900 கிராம் கஞ்சா பறிமுதல்

by Staff / 18-12-2022 03:00:00pm
 900 கிராம் கஞ்சா பறிமுதல்

ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுவிலக்கு பிரிவு அப்பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, பேக்கரி ஒன்றின் அருகில் இருந்து 2 வாலிபர்கள் தப்பியோட முயன்ற போது, ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அந்த நபரிடம் சோதனையிட்ட போது கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வாலிபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பிடிபட்ட நபர் ஈரோடு. கச்சேரி வீதியை சேர்ந்த உதயகுமார் மகன் முகேஷ் (வயது 20) என்பதும், தப்பியோடிய நபர் செந்தில் என்கிற கட்டைக்கால் செந்தில் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 900 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
 

 

Tags :

Share via