வாகன விபத்தில் உயிரிழந்த 3 பேர் குடும்பத்தினருக்கு நிதி வழங்கப்பட்டது.

by Editor / 29-08-2024 11:48:13pm
வாகன விபத்தில் உயிரிழந்த 3 பேர் குடும்பத்தினருக்கு நிதி வழங்கப்பட்டது.

சுரண்டை அருகே நடந்தவாகன விபத்தில் உயிரிழந்த 1.ஜானகி 2.பிச்சி 3.வள்ளியம்மாள் ஆகியோர் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து அறிவித்த இழப்பீடு தொகை தலா 2 இலட்சம் என மொத்தம் 6 இலட்சத்திற்கான காசோலையை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக் சிரு ,தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர்,தென்காசி மாவட்ட கண்காணிப்பாளர் வீ.ஆர்.சீனீவாசன் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் வழங்கினர். தென்காசி யூனியன் துணை சேர்மன் கனகராஜ் முத்து பாண்டியன் உடனிருந்தார்.

 

Tags : வாகன விபத்தில் உயிரிழந்த 3 பேர் குடும்பத்தினருக்கு நிதி வழங்கப்பட்டது.

Share via