புனே விபத்து: மகனின் ரத்தத்தை மாற்றிய தாய்

by Staff / 30-05-2024 05:09:41pm
புனே விபத்து: மகனின் ரத்தத்தை மாற்றிய தாய்

புனேவில் சொகுசு கார் மோதி இருவர் உயிரிழந்த வழக்கில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. மதுபோதையில் காரை ஓட்டிய 17 வயது சிறுவனின் தாய் ஷிவானி அகர்வால் மகனின் ரத்தத்திற்கு பதிலாக தனது ரத்தத்தை மாற்றி, மகன் மதுபோதையில் இல்லை என மோசடியாக சான்று பெற்றுள்ளார். இதையடுத்து, மகனின் ரத்தத்தை மருத்துவமனையில் மாற்றிய தாய் ஷிவானியை போலீசார் தேடி வருகின்றனர். இவ்விவகாரத்தில் 2 மருத்துவர்கள் ஏற்கனவே கைதாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க தகவல்.

 

Tags :

Share via