கட்டப் பஞ்சாயத்து செய்யும் அரசாங்கம்” - எல்.முருகன் விமர்சனம்

by Staff / 30-05-2024 05:11:42pm
கட்டப் பஞ்சாயத்து செய்யும் அரசாங்கம்” - எல்.முருகன் விமர்சனம்

சென்னை விமான நிலையத்தில் இன்று (மே 30) மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் சமீபத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கும், காவல் துறைக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதற்கு தமிழ்நாடு அரசு இரண்டு பேர் மீதும் தக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதனை விட்டுவிட்டு இருவரையும் அழைத்து கட்டப் பஞ்சாயத்து நடத்திட்டு இருக்காங்க. இதன் மூலம் தமிழ்நாட்டு முதலமைச்சர் எந்த அளவிற்கு செயல்படாமல் இருக்கிறார் என்பதை காட்டுகிறது” என்றார்.

 

Tags :

Share via