கடமானை வேட்டையாடி கறியை விற்ற 2பேர் கைது.
நெல்லை மாவட்டம் களக்காடு வனச்சரக தோட்டபகுதிகளில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி வனவிலங்குகளை வேட்டையாடி வருவதாக வனத்துறையினருக்கு தகவல்கிடைக்கவே வனத்துறையினர் அந்தப்பகுதிகளில் முகாமிட்டு கண்காணிப்புபணியில் ஈடுபட்டநிலையில் கடமான் வேட்டையாடி விற்பனைசெய்யப்படுவதாக கிடைத்த தகவலைத்தொடர்ந்து களக்காடு மஞ்சுவிளை பகுதியை சேர்ந்த ராஜாசிங்(27) ரவிக்குமார்(27)ஆகிய இருவரை வனத்துறையினர் கைதுசெய்தனர்.ஸ்டீபன் ராஜ் (30) என்பவர் தப்பி ஓட்டம்.கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த கடமான் இறைச்சி துண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Tags :