பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் அதிகரிக்கும் கற்பழிப்பு புகார்கள் குற்றங்களை கட்டுப்படுத்த அவசரநிலை பிரகடனம்

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் அதிகரிக்கும் கற்பழிப்பு புகார்கள் குற்றங்களை கட்டுப்படுத்த அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் அங்கு நான்கு அல்லது ஐந்து பலாத்கார புகார் கூறப்படுகிறது. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாலியல் வன்கொடுமை தடுக்க தற்போது அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் செயல்திட்டம் வகுக்கப்படும் என்று பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
Tags :