மாணவர்களோடு சென்ற பள்ளி பேரூந்து காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செய்யாமங்கலம் கிராமத்திற்கு இன்று காலை தனியார் பள்ளி பேருந்து பசும்பொன் கிராமத்தில் இருந்து மாணவர்களை அழைத்து செல்வதற்காக பேரூந்தில் 25 மாணவ மாணவிகளுடன் செய்யாமங்கலம் பரளையாறு தரைப்பாலம் மீது சென்ற போது அந்த ஆற்றின் தரப்பாலத்தில் தீடீரென காட்டாற்று வெள்ளம் வந்துள்ளது.இதனை சற்றும் எதிர்பாராத வாகன ஓட்டுநர் மிகவும் சிரமத்தோடு வாகனத்திலிருந்து மாணவர்களுக்கு சேதம் ஏற்படாவண்ணம் பேரூந்தை இயக்கியுள்ளார்.இருந்தும் பள்ளிப்பேருந்தை காட்டாற்று வெள்ளம் இழுத்துச் சென்றது.இதில் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர்.
Tags :