தாளவாடி அருகே மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு

by Staff / 19-09-2023 03:40:40pm
தாளவாடி அருகே மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே உள்ள பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜோதி (26) இவருக்கும் கர்நாடக மாநிலம், சிக்மங்களூர், தரிக்கரை தாலுக்காவைச், சேர்ந்தவர் டிரைவர் சிவராஜ் - (33) என்பவருக்கும் திருமணமாகி கர்நாடக மாநிலத்தில் வசித்து வந்துள்ளனர். தம்பதியருக்கு ரக்ஷனா (04) வயதில் மகள் உள்ளார். தம்பதியர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தாளவாடி, பாளையம் பகுதியில் உள்ள அவருடைய அப்பா வீட்டிற்கு ஜோதி குழந்தையுடன் வந்து இருந்துள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இவர்கள் வீட்டில் இருந்து விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக கரண்ட் எடுத்துள்ளனர். இந்நிலையில் வீட்டில் துவைத்த துணிகளை உலர வைப்பதற்காக ஜோதி அங்கிருந்த கம்பியில் துணிகளை காயப் போட்டுள்ளார்.அப்பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் வலியில் சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு அருகில் இருந்த அவருடைய சித்தப்பா கெம்பராஜ் விரைந்து சென்று ஒரு குச்சியால் அடித்து கீழே தள்ளியுள்ளார். பிறகு அங்கிருந்து காரில் தாளவாடி அரசு மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றுள்ளனர். ஜோதியை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டாதாக தெரிவித்தனர். இறந்தவரின் கையில் மோதிர விரல் மற்றும் ஆள்காட்டி விரலில் சிறிய காயம் உள்ளதால் தாளவாடி இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் தங்கதுரை ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via