ஜாபர் சாதிக்கின் காவல் நீட்டிப்பு

by Staff / 16-04-2024 02:37:37pm
ஜாபர் சாதிக்கின் காவல் நீட்டிப்பு

போதைப்பொருள் கடத்தல் வழக்கில், ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவலை மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்து
டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கடந்த மாதம் 9ஆம் தேதி ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், 5 பேரின் நீதிமன்ற காவலும் வரும் 20ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப்பத்திரிக்கை மீதான விசாரணையும் ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே டெல்லி சிறப்பு நீதிமன்ற வளாகத்தில் ஜாபர் சாதிக் உடன் அவரது சகோதரர் சலீம் சந்தித்து பேசினார்.இந்த வழக்கு தொடர்பாக இயக்குநர் அமீர் ஏற்கனவே டெல்லியில் தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவில் விசாரணைக்கு ஆஜராகி இருந்தார்.

 

Tags :

Share via