அரசு பேருந்து ஓட்டுனர் தற்கொலை

by Staff / 13-02-2023 04:29:10pm
அரசு பேருந்து ஓட்டுனர் தற்கொலை

சென்னை ஆழ்வார் திருநகரை சேர்ந்தவர் தேவராஜ், 53. மாநகர பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இரு ஆண்டுகளுக்கு முன் அவரது மூத்த மகன் தற்கொலை செய்து கொண்டார். அதிலிருந்து தேவராஜ் விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் 9ம் தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் வீடு திரும்ப வில்லை. மறுநாள் காஞ்சிபுரம் அடுத்த காரைபேட்டையில் உள்ள தனியார் கல்லுாரி வளாகத்தில் உள்ள மரத்தில் வேட்டியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via