சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளி கைது

by Staff / 21-05-2023 04:28:37pm
சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளி கைது

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள அருகம்பாளைத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் (27) என்ற கூலித் தொழிலாளி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 17 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 14-ம் தேதி சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து தனது வீட்டில் அடைத்து வைத்து 5 நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் பாலசுப்பிரமணியத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

 

Tags :

Share via