குற்றாலத்தில் உணவகங்களில் சோதனை 20 கிலோ கெட்டுப்போன சிக்கன் பறிமுதல்.

by Editor / 18-07-2023 10:37:09pm
குற்றாலத்தில் உணவகங்களில் சோதனை 20 கிலோ கெட்டுப்போன சிக்கன் பறிமுதல்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் உள்ளது. அருவிகளில் மிதமான தண்ணீர் விழுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகிறார்கள். இந்த நிலையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை. ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குற்றாலத்தில் உணவகங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் இன்று குற்றாலத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நாகசுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது குளிர்சாதன பெட்டியில் வெட்டி வைக்கப்பட்டிருந்த 20 கிலோ சிக்கன் கெட்டு போய் இருந்ததை கண்டுபிடித்தார். மேலும் அதில் நான்கு கிலோ சாப்பாடும் வெகு நேரத்திற்கு முன்பு சமைத்து வைக்கப்பட்டிருந்தது. அவற்றை அதிகாரி அழித்தார். பின்னர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் அங்கு இருந்ததை பறிமுதல் செய்தார். மொத்தம் இதற்காக 6000 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது. தொடர்ந்து குற்றாலத்தில் இந்த சோதனைகள் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via