தேனி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிகளில் எய்ம்ஸ் மாணவர் சேர்க்கையை நடத்தலாம்!: ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்..!!

by Admin / 30-07-2021 03:31:03pm
தேனி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிகளில் எய்ம்ஸ் மாணவர் சேர்க்கையை நடத்தலாம்!: ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்..!!



மதுரை: தேனி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிகளில் எய்ம்ஸ் மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது

எய்ம்ஸ் நிர்வாகம் பொருத்தமான இடத்தை தேர்வு செய்வதுடன் தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும்

. எய்ம்ஸ் நிர்வாகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தால் மாணவர் சேர்க்கை தொடங்க ஏதுவாக இருக்கும் என்று தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று வழக்கை ஆகஸ்ட் 15ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது.

 

 

Tags :

Share via