சிறுவனுக்கு பாலியல் தொல்லை

by Staff / 23-10-2023 04:03:48pm
சிறுவனுக்கு பாலியல் தொல்லை

கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுவன். இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவன் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு வீட்டிற்கு வெளியே சிறுவன் விளையாடி கொண்டருந்தபோது அந்த வழியாக வந்த ராமராஜ் என்பவர் சிறுவனிடம் வந்து நைசாக பேச்சு கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்து வெளியே சொல்லக்கூடாது என கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.இதனை அறிந்த சிறுவனின் தாய் இது குறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் நேற்று ராமராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories