1-10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படுகிறது.

by Editor / 10-06-2022 09:25:05pm
1-10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படுகிறது.

தமிழகத்தில் வரும் திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் சில அரசு பள்ளிகள் ஏராளமான தனியார் பள்ளிகள் அதற்கான முன்னேற்பாடுகள் தயார் நிலையில் செய்யபட்டு வருகின்றன. பள்ளிகளை சீரமைத்தல், வர்ணம் பூசுதல், சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்துள்ளது. விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள், நோட்டுகள் பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே விநியோகிக்கப்படுகின்றன.கோடை விடுமுறை முடிந்து 1-10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.மேலும் பல மாவட்டங்களிலுள்ள அரசு உதவி பெரும் பள்ளிகள்,தனியார் பள்ளிகளின் வாகனங்கள் இன்னும் ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல் இருந்து வருகின்றன.

 

Tags : Schools open Monday for students in grades 1-10.

Share via