பலாத்காரத்தை எதிர்த்த சிறுமிக்கு 16 முறை கத்திக்குத்து

by Staff / 01-09-2023 12:22:43pm
பலாத்காரத்தை எதிர்த்த சிறுமிக்கு 16 முறை கத்திக்குத்து

உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் பாலியல் பலாத்காரத்தை எதிர்த்த சிறுமி 16 முறை கத்தியால் குத்தப்பட்டுள்ளார், சிறுமியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. பிஜிஐ கோட்வாலி பகுதியில் நேற்று மாலை டியூஷன் முடிந்து ஸ்கூட்டரில் திரும்பிக் கொண்டிருந்த சிறுமியை.பங்கஜ் ராவத் என்ற இளைஞரும், அவரது நண்பர்களும் இழுத்துச் சென்று பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அப்போது சிறுமி கத்திக் கூச்சலிட்டதால் 16 முறை கத்தியால் குத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றவாளி பங்கஜ் ராவத், கடந்த ஒரு வருடமாக பாதிக்கப்பட்ட சிறுமியை துன்புறுத்தி வந்ததாகவும், தப்பியோடிய குற்றவாளிகளை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via