விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்-தொடர் போக்குவரத்து பாதிப்பு.
தொடர் விடுமுறை முடிந்து மக்கள், தங்களது சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்பி வருவதால், செங்கல்பட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல். 5 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இன்னும் அதிகளவில் வாகனங்கள் தென்மாவட்டங்களில் இருந்து சென்னையை நோக்கிவருவதால் விடிய..விடிய போக்குவரத்து நெரிசல் நீடிக்கவாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags : விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்-தொடர் போக்குவரத்து பாதிப்பு.