நாட்டு வெடிகுண்டு கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கனவே திண்டிவனம் நீதிமன்றத்தில் 7 பேர் சரணடைந்த நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு நீதிமன்ற வளாகத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி, சரமாரியாக வெட்டப்பட்ட ரவுடி லோகேஷ், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த 7ஆம் தேதி உயிரிழந்தார். லோகேஷ், சீனிவாசன் ஆகிய இருவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜராக வந்த போது, 6 பேர் கும்பல் அவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி ஓட ஓட வெட்டினர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார்.<br /> Tags :