பிஎஸ்எப் வீரர் உட்பட 6 பேர் பலி..

by Staff / 06-02-2024 12:16:11pm
பிஎஸ்எப் வீரர் உட்பட 6 பேர் பலி..

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை பயங்கர சாலை விபத்து நடந்தது. கார் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் பிஎஸ்எஃப் வீரர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். காரை வெளியே இழுத்து காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவுராயா மாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள் அனைவரும் திருமண விழாவுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது கார் விபத்துக்குள்ளானது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர் .


 

 

Tags :

Share via