உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டம் தாக்கல்
ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்தும் நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரகாண்ட் மாறவுள்ளது. யுசிசி மசோதாவைக் கொண்டுவருவதற்கான உத்தரகாண்ட் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த மசோதா 2-வது நாளான இன்று கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படுகிறது. மற்ற கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கலந்துரையாடலில் பங்கேற்குமாறு முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கேட்டுக் கொண்டார். இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Tags :