பள்ளி மாணவனுக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியர் கைது
திருச்சி கருமண்டபம் ராம் நகரை சேர்ந்தவர் அயன்ஸ்டீன் பாலா (55). இவர் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது வகுப்பில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவரை தனது வீட்டுக்கு டியூஷனுக்கு அழைத்துள்ளார். சம்பவத்தன்று அந்த மாணவனும் ஆசிரியரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போதுது ஆசிரியர் அயன்ஸ்டீன், மாணவனிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட முயற்சித்ததாக தெரிகிறது. இது குறித்து மாணவன் பெற்றோரிடம் தெரிவித்தார். பெற்றோர் அந்த மாணவனை அழைத்துக் கொண்டு திருச்சி குழந்தைகள் நல அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியரை கைது செய்தனர்.
Tags :